திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி எல்லைக்குட்பட்ட தாராபுரம் சாலையில் பயோமைனிங் வழிமுறையில் சுமார் 4.75 ஏக்கர் பரப்பளவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகராட்சி பகுதியில், கழிவுகளை மேலாண்மை செய்யதே பயோ மைனிங் ஆகும். குப்பைக் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளிலிருந்து மக்கும் குப்பைகளையும் மக்கா குப்பைகளையும் பிரித்தெடுத்து, மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மக்கா குப்பைகளை மறுசுழற்சி செய்து மின்சாரமும் தயாரிக்கலாம். 

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ராஜாராம் பயோ மைனிங் செய்யும் இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய உரங்கள் எவவ்ளவு இருப்பில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். அதோடு, மேற்படி இடத்தை ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்காமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் கோரிக்கை

உடுமலை நகர் பகுதியில் பொழுதுபோக்குக்கென்று பெரியளவில் பூங்கா ஏதும் இல்லை. பயோ மைனிங் நடைபெறும் இந்த இடத்தில் பெரியளவில் பூங்கா அமைத்தால் இப்பகுதியிலுள்ள மக்கள் நடைப்பயிற்சி, உடற்பயிற்சிகள் செய்யவும், குழந்தைகள் விளையாடி மகிழவும் ஏதுவாக இருக்கும்.பயோ மைனிங் நடைபெறும் இடம் பெரிய பரப்பளவு என்பதால் பல்வேறு வகையான மரங்களை நடவு செய்து பெரிய சோலையாக மாற்றி பூங்கா அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் பூங்கா அமைக்கப்படுமா?