மணிப்பூர் மாநிலத்தில் என்.பிரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. முப்பது ஆண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருந்த மணிப்பூரில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாராயம் காய்ச்சிப் பருக அனுமதி இருந்து வந்தது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அதிகரிப்பு மற்றும் கள்ளச் சந்தையில் மது விற்பனை, மாநில வருவாயை பெருக்கும் வகையிலும் மதுபானங்கள் விற்பனையை சட்டப்பூர்வமாக்க இந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் மணிப்பூரில் மதுவை வாங்க, விற்க மற்றும் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. அதோடு, மணிப்பூர் மதுபானங்கள் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (MSBCL) நிறுவனத்தை உருவாக்க ஒப்புதலும் அளித்துள்ளது.
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் இருந்து மணிப்பூர் வெளியேறியுள்ளாதால் தற்போது பீகார், குஜராத், நாகலாந்து, மிசோரம், லட்சத்தீவு (யூ.பி) ஆகிய மாநிலங்களில் மட்டுமே மதுவிலக்கு அமலில் உள்ளது.