திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு இன்று (பிப்-08) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சின்னவீரம்பட்டி ஊராட்சி பகுதிகளில் சொந்த இடம், வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் மிகுந்த சிரமத்தோடு வசித்து வரும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனைத்திட்டத்தின் கீழ் வீட்டுமனைகள் வழங்க நடவடிக்கை எடுத்து 32 ஆண்டு காலமாக தொடரும் அவல நிலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
previous article
பழநி – 50 ஆண்டுகளுக்கு முன்னர் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
you might also like
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்.. முன்பகை காரணமா?
December 12, 2025
தீபத்தூணா, சர்வே கல்லா? திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி?
December 6, 2025





