தமிழ்நாட்டில் இந்த மே மாதம் தொடக்கம் முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாகத் தமிழ்நாட்டில் கோடைக் காலத்தில் வெப்பம் படுத்தி எடுக்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக வெப்பம் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதலே மாநிலத்தில் பல இடங்களில் மழை கொட்டி வருகிறது.
சென்னையிலேயே கூட பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக மழை பெய்திருந்தது. 15 மாவட்டங்களில் மழை கொட்டும் அடுத்து இப்போது பருவமழை சீசனும் சீக்கிரமே தொடங்கிவிட்டது. இதனால் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலும் மழை ஆரம்பித்துவிட்டது. தமிழகத்திலும் கூட பரவலான இடங்களில் மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை (மலையை ஒட்டியுள்ள பகுதிகள்), கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மக்களே கவனம் அதேபோல திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வானிலை மையம் முன்னதாக வானிலை மையம் இன்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், “இன்று (27-05-2025) ஒடிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் அதி கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தொடரும் நாளைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (27-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது