மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ரமேஷ், மேற்கு ஒன்றிய திமுக வர்த்தக அணி இணை ஒருங்கிணைப்பாளர், நரசிங்காபுரம், செட்டியார் மில் திமுக பாக பொறுப்பாளர் கோபால்சாமி மற்றும்  திமுக உறுப்பினர்களான பாபு (எ) எல்.பழனிச்சாமி, ஏ.மகேஸ்குமார் ஆகியோர் திமுகவிலிருந்து விலகி திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர்.

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் கட்சிகளைக் கடந்து தனிப்பெரும் செல்வாக்கோடு உள்ளார்

அதிமுக கட்சியில் இணையும் நிகழ்வை மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக துணைச் செயலாளர் ரகுராமன் ஏற்பாட்டில், மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி. சிவலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய புரட்சித்தலைவி பேரவை செயலாளர் சுரேஷ்குமார், ஒன்றிய பாசறை செயலாளர் கௌதம், ஒன்றிய இளைஞரணி தலைவர் சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.