கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் தெற்கு பிலிப்பைன்ஸில், இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, “கடவுளின் நியமனம் செய்யப்பட்ட மகன்” மற்றும் Kingdom of Jesus Christ(KOJC) தேவாலயத்தின் பாதிரியார் என்று தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட அப்பல்லோ குய்போலோயை போலீசார் கைது செய்தனர். குய்போலோய் – உலகளவில் பிரபலமான ஒரு சுவிசேஷகர், முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவுடன் நெருங்கிய நண்பர் மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்கள் கொண்டுள்ளார்.

குய்போலோய்

74 வயதான குய்போலோய் இப்போது குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் மனித கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார், இது 2021 இல் அமெரிக்க குற்றச்சாட்டிலிருந்து உருவாகிறது. Quiboloy எப்படி அதிகாரத்திற்கு வந்தார் தெற்கு பிலிப்பைன்ஸில் பிறந்த அப்பல்லோ கேரியன் குய்போலோய் சாதாரண போதகர் அல்ல. அவர் 1985 இல் KOJC ஐ நிறுவினார், இது அதிவேகமாக வளர்ந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் மில்லியன் கணக்கான ஆதரவாளர்களை ஈர்த்தது. நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, குய்போலோயின் சுயமாக அறிவிக்கப்பட்ட தெய்வீக அந்தஸ்துடன் பெந்தகோஸ்தே கிறிஸ்தவத்தின் கூறுகளை கலக்கும் KOJC, விரைவில் பிலிப்பைன்ஸில் ஒரு மேலாதிக்க சக்தியாக மாறியது. முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டேவின் “ஆன்மீக ஆலோசகர்” என்று அறியப்பட்ட குய்போலோய் உள்ளூர் மற்றும் தேசிய அரசியல்வாதிகள் மீது பெரும் செல்வாக்கை செலுத்தினார். அதிக வாக்குகளை ஈர்க்கும் அவரது திறமை அவருக்கு ஒரு ஆன்மீக அரசன் என்ற பெயரைப் பெற்று தந்தது. தேர்தல் வெற்றிக்கு அவரது ஆதரவை பலர் எதிர்பார்த்தனர், குறிப்பாக டாவோ நகரில், அவர் “புதிய ஜெருசலேம்” என்று அழைக்கப்படும் பரந்த 75 ஏக்கர் வளாகத்தை உருவாக்கினார்.

போலீசார் சுற்றிவளைப்பு

இருப்பினும், குய்போலோயின் ஆன்மீக இராஜ்ஜியம் பல இருண்ட ரகசியங்களை மறைத்தது, அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் சட்டத்துறையின் அறிக்கையின் படி. அவரது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, நம்பிக்கையின் போர்வையின் கீழ் அடிமைத்தனமான வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தப்பட்ட பாதிக்கப்படக்கூடிய பெண்கள் மற்றும் குழந்தைகளை மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் போன்ற குற்றங்களை செய்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகள் 2021 ஆம் ஆண்டில், Sex Trafficking, பாலியல் துஷ்பிரயோகம், சதி மற்றும் அடிமைகளாக நடத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குய்போலோய் அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பட்டார். 12 வயதிற்குட்பட்ட குய்போலோவால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிலர்,”ஆயர்”-தனிப்பட்ட உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர், அவர்கள் பாலியல் சலுகைகள் உட்பட அவரது ஒவ்வொரு தேவையையும் வழங்க கட்டாயப்படுத்தப்பட்டார்கள். “நைட் டியூட்டி” என்று குறிப்பிடப்படும், இந்த பாலியல் சந்திப்புகள் ஆன்மீக மற்றும் நித்திய அழிவின் அச்சுறுத்தலின் கீழ் நிர்ப்பந்திக்கப்பட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் சுற்றிவளைப்பு

இளம் பெண்கள் “உறுதி கடிதங்களை” எழுத கட்டாயப்படுத்தப்பட்டனர், அதில் அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் உடலையும் குய்போலோய்க்கு அர்ப்பணிப்பதாக எழுதப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டு கூறுகிறது. இந்த படத்துல உங்க கண்ணுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. நீங்க அக்கறையானவரா, இல்லையா-ன்னு சொல்றோம். பாதிக்கப்பட்டவர்களில் சிலரின் சாட்சியங்களின்படி, அவரை எதிர்ப்பதன் மூலம் “பாவம்” செய்ததாகக் கருதப்பட்டவர்கள், தாவோ நகரின் புறநகரில் உள்ள அவரின் சொத்தான “பிரார்த்தனை மலைக்கு (Prayer Mountain) அனுப்பப்பட்டனர். அங்கு தலையை மொட்டையடித்தல், உடல்ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பிற இழிவுபடுத்தும் செயல்கள் ஆகியவை தண்டனை என்ற பெயரில் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மனித கடத்தல் சம்பவங்கள் குய்போலோய மீது கூறப்படும் முறைகேடுகள் பிலிப்பைன்ஸில் மட்டும் இருக்கவில்லை.

அவரது தேவாலயத்திலும் ஒரு சர்வதேச தடம் இருந்தது, மேலும் அமெரிக்க வழக்கறிஞர்கள் அவரது நடவடிக்கைகளில் எல்லைகளுக்கு அப்பால் பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதை உள்ளடக்கியது என்று வெளிப்படுத்தினர். FBI இன் படி, சர்ச் உறுப்பினர்கள் மோசடியாக பெற்ற விசாவில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டனர். அங்கு, “குழந்தைகள் மகிழ்ச்சி அறக்கட்டளை(Children’s Joy Foundation)” என்று அழைக்கப்படும் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடைகள் கோர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இருப்பினும், அந்த நன்கொடைகள் ஒருபோதும் பின்தங்கிய குழந்தைகளுக்கு வழங்கப்படவில்லை. மாறாக, இந்த நிதியானது குய்போலோய் மற்றும் பிற தேவாலயத் தலைவர்களின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்தப்பட்டது, இதில் தனியார் ஜெட் விமானங்கள், ஆடம்பர சொத்துக்கள் மற்றும் பிற ஆடம்பரங்கள் ஆகியவை அடங்கும்.

கடவுளின் மகனின் கைது பிலிப்பைன்ஸில், குய்போலோய் தனது தாவோ நகர தலைமையகத்தில் இருந்து தொடர்ந்து பிரசங்கித்து உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தினார். 2021 ஆம் ஆண்டில் FBI இன் மோஸ்ட் வாண்டட் பட்டியலில் இடம்பிடித்த போதிலும், அவர் பெரும்பாலும் நெருங்க முடியாதவராகவே இருந்தார், டுடெர்டே உட்பட அவரது சக்திவாய்ந்த அரசியல் கூட்டாளிகளால் பாதுகாக்கப்பட்டார். ஆகஸ்ட் 24 அன்று, பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், இராணுவத்துடன் ஒருங்கிணைந்து, KOJC இன் டாவோ சிட்டி வளாகத்தில் ஒரு பெரிய சோதனையைத் தொடங்கினர். அவர் ஒரு பதுங்கு குழியில் பதுங்கியிருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், அவரது தேவாலயத்திற்கு சொந்தமான – Kingdom of Jesus Christ (KOJC) -க்கு சொந்தமான தெற்கு நகரமான டாவோவில் உள்ள 74 ஏக்கர் வளாகத்தை இரண்டு வாரங்களுக்கும் மேலாக தேடுவதற்கு 2,000 க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டனர். அவரைக் கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை கேடயம் ஏந்திய போலீஸார் அமல்படுத்துவதைத் தடுக்க குய்போலோயின் ஆதரவாளர்கள் வளாகத்தின் வாயிலைத் தடுத்தனர். 75,000 இருக்கைகள் கொண்ட கதீட்ரல், கல்லூரி மற்றும் அரங்கம் ஆகியவற்றின் மீது போலீசார் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தினர். குய்போலோய் கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, தெர்மல் இமேஜிங் மற்றும் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமியில் ஆழமான மனித உடலின் வெப்பம் மற்றும் இதயத் துடிப்பை போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பல நாட்கள் தேடலுக்குப் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார்.