மதுரை மாவட்டம், விருதுநகர் உட்கோட்டம், ஒ.முத்துலாபுரம் கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக அங்குள்ள ஒரு கண்மாயில் வெள்ள நீர் நிறைந்து கிராமத்திற்குள் சென்று கடும் பாதிப்புக்கு உள்ளானது. மேற்படி கிராமத்தில் வருவாய்துறை, காவல்துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகியோர் இணைந்து பொதுமக்கள் உதவியுடன் வெள்ளநீர் வடிய துரிதமாக செயல்பட்டனர்.

மேலும், ஆமத்தூர் காவல் நிலைய சரகம், சேர்வைக்காரன்பட்டி மற்றும் உப்போடை கிராமத்தில் அதிகமாக வெள்ள நீர் செல்வதால், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அங்குள்ள பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்து அங்கிருந்த 165 நபர்களை சேர்வைக்காரன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மதுரை மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் IPS அறிவுறுத்தலின்படி; மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் ரம்யா பாரதி IPS, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் IPS, உதவி காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் IPS ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
-கே.தமிழகம் சேட்.