நீதிமன்றங்கள் சில நேரங்களில் சில விசித்திரமான வழக்குகளை சந்திக்கும் அப்படிபட்ட வழக்குகளில் நீதிமன்றமே வழக்குகளை முறையாக ஆராய்ந்து தெளிவான தீர்வை நோக்கி சென்று தீர்ப்பளிக்கும். அப்படிப்பட்ட தீர்ப்புகளும் வரலாற்று பதிவுகளில் பொன் எழுத்துக்களால் நிலைத்து நிற்கும்.

அப்படி ஒரு வழக்கு கடந்த சில ஆண்டுகளாக பரிதவிப்பில் இருந்த மாணவர்களுக்கு பெரிய உந்து சக்தியாகவே மாறிப்போனது. அப்படி என்ன வழக்கு? என்ன படித்தனர் மாணவர்கள்? ஏன் நீதிமன்றம் வரை சென்றது? எனத் தோன்றும்.

எப்போதும் போலத்தான் மதுரை உயர்நீதி மன்றமும் ஜுலை அன்று 04.09.2023 வழக்கம் போல் கூடியிருக்கும் இப்படி ஒரு வழக்கு வரும் என்று நீதியரசரும் எதிர்பார்த்திருக்க மாட்டார். வழக்கு எண் wp(mdu)18375/2023 வழக்கில் திண்டுக்கல் காந்தி கிராமம் பல்கலை கழகம் உள்ளது. இங்கு கடந்த 70 வருடங்களாக முதுகலை பட்டய படிப்பான சுகாதார ஆய்வாளர்கள் (Sanitary Inspector) படிப்பு மாணவர்களின் படிப்பு சம்மந்தப்பட்ட வழக்கு.

வழக்கில் இந்த படிப்பு படித்த சுகாதார ஆய்வாளர்கள் (Sanitary Inspector) தமிழக சுகாதரத்துறையின் கீழ் இயங்கும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியப் (Medical Service Recruitment Board) பணிக்கு விண்ணப்பிக்க தகுதியில்லை. அதே நேரத்தில் தமிழக சுகாதாரத்துறையில் கடந்த சில ஆண்டுகளாக பணியமர்த்தாமல் இருந்தது. இப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பணியின் மொத்த எண்ணிக்கை 1066 ஆகும். இனி நமக்கு பணி கிடைக்காது. கடந்த 70 ஆண்டுகளாக தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள ஏனைய மாநிலங்களின் சுகாதார துறையில் முதுகலை பட்டய படிப்பு படித்தோம். சில வருடங்களாகவே இப் பணி நிரப்பப்படாமல் இருந்தது. இதனால், மாணவர்கள் சென்னை, மதுரை உயர்நீதி மன்றங்களில் வழக்கு தொடுத்தனர்.

மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண் wp(mdu)183752023 எண்ணில் மாண்புமிகு நிதியரசர் திரு.விக்டோரியா கவுரி அவர்கள் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கில் நீதிமன்றம் சொல்லும் வரை பணி நியமனம் கூடாது. கடந்த 70 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் மாநகராட்சி, நகராட்சி போன்றவைகளில் ரயில்வே போன்ற இடங்களில் சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்து வரும் படிப்பு படித்த மாணவர்களுக்கும் இந்த (MRB)யில் விண்ணப்பம் செய்ய அனுமதிக்க வேண்டும். விண்ணப்ப காலம் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டு காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் படித்த முதுகலை சுகாதார பட்டய படிப்பு மாணவர்களின் வாழ்கையில் விளக்கேற்றியுள்ளார் நீதியரசர். அதே சமயம் சென்னை, மதுரை உயர்நீதி மன்றங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிட்டு வழக்குகள் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் காந்தி கிராம பலகலைக்கழகத்தின் சுகாதார ஆய்வாளர்களின் படிப்பின் தரம் குறித்தும் சுகாதார ஆய்வாளர்களின் பரிதாப நிலை குறித்தும் மாண்புமிகு நீதிமன்றம் உணர்ந்ததை எண்ணிப் பார்க்கும் மாணவர்கள். இப்படிப்பு படித்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாவதை எண்ணிப் பார்க்காத காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்காக எந்த முன்னெடுப்பும் செய்யாமல் இருப்பதை எண்ணிப் பார்க்கும் போது பல்கலைக்கழகத்தின் மீது பல்வேறு சந்தேகங்களை வர வழைக்க தோன்றுகிறது என்று புலம்புகிறார்கள் மாணவர்கள்.

இதே பல்கலை கழகத்தில் Bsc (Agri.), Diploma (Agri), BE Agri என படித்தும் மேல் படிப்பு முதுகலை படிப்பான கமர்சியல் ஹார்டிக்கல்சர் (Commercial Horticulture) 1 வருட படிப்பு படித்த மாணவர்களின் படிப்பு எந்த வித தகுதி இல்லாத படிப்பு என்று அனைத்து துறைகளுமே புறந்தள்ளி இப்போது அந்த முதுகலை பட்டைய படிப்பை பல்கலைக்கழக நிர்வாகமே நிறுத்தி விட்டது.

அதுமட்டுமல்ல, இதே பல்கலைக்கழகத்தின் இதே முதுகலை பட்டைய படிப்பான சுகாதார ஆய்வாளர் கடந்த 2019 ஆண்டில் சுமார் 300 பதவிகளுக்கு நியமனம் செய்ய தமிழக சுகாதாரத் துறையான (MRB) சான்றிதழ் சரிபார்ப்பு வரை நடந்தும் இதுவரை அந்த பதவிக்கான பணி நியமனம் ஏன் நிலையில் இருக்கின்றது என்று தெரியவில்லை? இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பாக எதுவும் கண்டுகொள்வதில்லை  என்று அங்கலாய்கிறார்கள் இங்கு படித்த மாணவர்கள்.

கண்டுகொள்வாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்தான் தற்போதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. இவரின் சட்டமன்ற தொகுதியான ஆத்தூர் தொகுதியில்தான் இந்த காந்தி கிராமிய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு படிக்கும் ஏழை கிராமப்புற மாணவர்கள் அனைவரும் ஆத்தூர் தொகுதிவாசிகள்தான். சுகாதார ஆய்வாளர் படிப்பு படித்த மாணவர்களும் இச்சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தான். ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையிலும், மாநிலத்தின் அமைச்சர் என்ற முறையிலும், இந்த சுகாதார ஆய்வாளர் பிரச்சனையில் தனிக்கவனம் செலுத்தி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பாரா அமைச்சர் ஐ.பெரியசாமி?

மாணவர்களுக்காக முன் நின்று போராட வேண்டிய காந்தி கிராமம் பல்கலைக்கழக நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது பேரவலம். மேற்கண்ட சில படிப்புகளும் செல்லாத நிலையில் இருக்கும் போது இதுபோலவே ஒவ்வொரு படிப்பு செல்லாத நிலை வந்து கடைசியில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரில் ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் உயர்கல்வியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் காந்தி கிராம பல்கலைக்கழகம் நாளடைவில் இழுத்து மூடும் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம் என்று இங்கு பணிபுரியும் பணியாளர்களே புலம்புகின்றனர். பல்கலைக்கழகம் மூடுவிழா காணும் முன்பே மத்திய அரசும், மாநில அரசும் விழித்துக்கொண்டால் நல்லது?

-நரசிம்மன் முத்தரசு